ஏழுமணி ராசிபலனில்
ஒவ்வொரு ராசிக்காரனுக்கும்
வெவ்வேறு பலன்.
எட்டரைமணிச் செய்தியில்
பூகம்பம் நிகழ்ந்து
பத்தாயிரம் பேர் பலி.
Sunday, May 16, 2010
Friday, May 14, 2010
Wednesday, May 12, 2010
Saturday, May 8, 2010
இயற்கைப் புரிதல்
28-04-10
28-04-10
இந்த வாழ்கை இயற்கை கொடுத்தது
என்பதில் மாற்றமில்லை.
அந்த இயற்கையை வணங்குவதென்பது
அறிவுக்குப் பொருந்தவில்லை.
இயற்கை என்பது யாறோ இருந்து
இயக்கும் விஷயமில்லை. - அதைப்
பயந்து வணங்கித் துதிப்பதனாலே
பயனொன்றும் விளைவதில்லை.
பொருளே முதலில் இருந்தது என்பது
பொருள் முதல் வாதம். - அந்தப்
பொருளை இயக்கும் அறிவைப் படைத்தது
மனிதனின் பிடிவாதம்.
இயற்கையைப் படைத்தது இறைவன் என்பது
இனிய கற்பனைதான். - சரி
இறைவனைப் படைத்தது யாரெனக் கேட்டால்
இதுவரை பதில் இல்லை.
பூகம்பம் நிகழ்ந்தால் புதைந்து மடிவதில்
பாதிபேர் பக்தர்கள் தான். - அதில்.
பூமாதேவிக்குப் பூசைகள் செய்த
பூசாரி இறந்திருப்பான்.
பூகம்பம் என்பது பூமிக்கு அடியினில்
நிகழ்கிற மாற்றமென்றும், - நம்
சாமிக்கும் அதற்க்கும் நிச்சயமாகச்
சம்பந்தமில்லை என்றும்,
அறிந்து சொன்னது அறிவியலென்பது
அனைவருக்கும் தெரியும். - அட
இருந்தும் நாம் ஏன் இறைவனைத் துதித்தோம் ?
இனிமேல் தேவையில்லை.
இயற்கையைக் காக்கிற வழிமுறை தேடி
எல்லோரும் பயணிப்போம். - அதை
வியந்து ரசித்து விரும்பி அணைத்து
விருத்தங்கள் பாடிவைப்போம்.
To view the video of this poem please Click Hear
Subscribe to:
Posts (Atom)
-
சகோதரனே . . ! என்று நீ பரிவோடு கட்டியணைத்தாய், பிரிந்து செல்லும்போதுதான் கவனித்தேன் என் உடம்பெங்கும் ஒட்டியிருந்தது சிலுவை.
-
மதம் ஒரு கொடிய வியாதி. அது தோற்று வியாதியும் கூட. மதக்கிருமிகள் பரம்பரையாகவே கடத்தப்படுகின்றன. எதிர்ப்பு சக்தி உள்ளவனையும் - அவை எழிதில் வீ...
-
பிரார்த்தனை பிச்சைதான் . . . பிச்சைக்காரர்கள் வாசலிலும் வாசலுக்குள்ளும். வெளியிலிருப்பவன் சிறியதாய்க்கேட்கிறான் அவன் சின்ன பிச்சைக்காரன...
