Saturday, May 8, 2010

                 இயற்கைப் புரிதல்
                                               28-04-10

இந்த வாழ்கை இயற்கை கொடுத்தது
                   என்பதில் மாற்றமில்லை.
அந்த இயற்கையை வணங்குவதென்பது
                   அறிவுக்குப் பொருந்தவில்லை.

இயற்கை என்பது யாறோ இருந்து
                   இயக்கும் விஷயமில்லை. - அதைப்
பயந்து வணங்கித் துதிப்பதனாலே
                   பயனொன்றும் விளைவதில்லை.

பொருளே முதலில் இருந்தது என்பது
                   பொருள் முதல் வாதம். - அந்தப்
பொருளை இயக்கும் அறிவைப் படைத்தது
                   மனிதனின் பிடிவாதம்.

இயற்கையைப் படைத்தது இறைவன் என்பது
                   இனிய கற்பனைதான். - சரி
இறைவனைப் படைத்தது யாரெனக் கேட்டால்
                   இதுவரை பதில் இல்லை.

பூகம்பம் நிகழ்ந்தால் புதைந்து மடிவதில்
                   பாதிபேர் பக்தர்கள் தான். - அதில்.
பூமாதேவிக்குப் பூசைகள் செய்த
                   பூசாரி இறந்திருப்பான்.

பூகம்பம் என்பது பூமிக்கு அடியினில்
                   நிகழ்கிற மாற்றமென்றும், - நம்
சாமிக்கும் அதற்க்கும் நிச்சயமாகச்
                   சம்பந்தமில்லை என்றும்,

அறிந்து சொன்னது அறிவியலென்பது
                   அனைவருக்கும் தெரியும். - அட
இருந்தும் நாம் ஏன் இறைவனைத் துதித்தோம் ?
                   இனிமேல் தேவையில்லை.

இயற்கையைக் காக்கிற வழிமுறை தேடி
                   எல்லோரும் பயணிப்போம். - அதை
வியந்து ரசித்து விரும்பி அணைத்து
                   விருத்தங்கள் பாடிவைப்போம்.
 
 To view the video of this poem please Click Hear

No comments: