இயற்கைப் புரிதல்
28-04-10
28-04-10
இந்த வாழ்கை இயற்கை கொடுத்தது
என்பதில் மாற்றமில்லை.
அந்த இயற்கையை வணங்குவதென்பது
அறிவுக்குப் பொருந்தவில்லை.
இயற்கை என்பது யாறோ இருந்து
இயக்கும் விஷயமில்லை. - அதைப்
பயந்து வணங்கித் துதிப்பதனாலே
பயனொன்றும் விளைவதில்லை.
பொருளே முதலில் இருந்தது என்பது
பொருள் முதல் வாதம். - அந்தப்
பொருளை இயக்கும் அறிவைப் படைத்தது
மனிதனின் பிடிவாதம்.
இயற்கையைப் படைத்தது இறைவன் என்பது
இனிய கற்பனைதான். - சரி
இறைவனைப் படைத்தது யாரெனக் கேட்டால்
இதுவரை பதில் இல்லை.
பூகம்பம் நிகழ்ந்தால் புதைந்து மடிவதில்
பாதிபேர் பக்தர்கள் தான். - அதில்.
பூமாதேவிக்குப் பூசைகள் செய்த
பூசாரி இறந்திருப்பான்.
பூகம்பம் என்பது பூமிக்கு அடியினில்
நிகழ்கிற மாற்றமென்றும், - நம்
சாமிக்கும் அதற்க்கும் நிச்சயமாகச்
சம்பந்தமில்லை என்றும்,
அறிந்து சொன்னது அறிவியலென்பது
அனைவருக்கும் தெரியும். - அட
இருந்தும் நாம் ஏன் இறைவனைத் துதித்தோம் ?
இனிமேல் தேவையில்லை.
இயற்கையைக் காக்கிற வழிமுறை தேடி
எல்லோரும் பயணிப்போம். - அதை
வியந்து ரசித்து விரும்பி அணைத்து
விருத்தங்கள் பாடிவைப்போம்.
To view the video of this poem please Click Hear

No comments:
Post a Comment