Saturday, April 24, 2010

  பிள்ளைக்கு அறிவுரை
                                                          14.04.10

கடவுள் இல்லை என்பதை நீயும்
               கண்டுகொள் மகளே!
அடம்பிடிக்கும் சில அறிவற்றோரைத்
               திருந்தச்சொல் மகளே!

ஆதி மனிதன் தீயைப் பார்த்து
               அச்சம் கொண்டதனால் - அதை
ஜோதி என்று சொலிகொண்டு
               வணங்கத்தொடங்கி விட்டான்.

இயற்கை தெய்வம் என்று இருந்த
               மக்கள் பின்னாலே
செயற்கையாக தெய்வங்களையும்
               செய்யத் தொடங்கிவிட்டார்.

பறவை மீன்கள் பாலூட்டிகளையும்
               தெய்வம் என்றார்கள் - பின்
இறந்து போன மனிதரையெல்லாம்
               இறைவ(ன்) ஆக்கி விட்டார்.

பரந்து விரிந்த உலகம் இதனைப்
               படைத்த சக்தியினை
பரம்பொருளென்று சொல்லுவதாலே
               பாதகம் இல்லை யென்றார்.

சரிதான் ஆனால் சாட்சியமில்லை
               சரித்திரம் வேறம்மா. - இதை
அறிஞர் டார்வின் அன்றே நமக்கு
               அடித்துச் சொல்லி விட்டார்.

குறங்கிலிருந்து பிறந்தோம் ஆனால்
               குணத்தில் மாற்றமில்லை
மரத்தில் இருந்து இறங்கி வந்து
               மதத்தில் ஏறிவிட்டோம்.

அடிதடி சண்டை ஆர்ப்பாட்டங்கள்
               அனைத்தும் ஏனம்மா? - சிறு
கடுகளவுக்கு பயனில்லாத
               கடவுளால் தானம்மா.

இனியொரு உலகம் அமைப்போம் அதிலே
               இறைவன் தேவையில்லை. - சக
மனிதனை மதிப்போம், மனிதனாய் வாழ்வோம்
               மதங்களும் தேவையில்லை.
  
To view the video of this poem  CLICK HEAR