பிள்ளைக்கு அறிவுரை
14.04.10
கடவுள் இல்லை என்பதை நீயும்
கண்டுகொள் மகளே!
அடம்பிடிக்கும் சில அறிவற்றோரைத்
திருந்தச்சொல் மகளே!
ஆதி மனிதன் தீயைப் பார்த்து
அச்சம் கொண்டதனால் - அதை
ஜோதி என்று சொலிகொண்டு
வணங்கத்தொடங்கி விட்டான்.
இயற்கை தெய்வம் என்று இருந்த
மக்கள் பின்னாலே
செயற்கையாக தெய்வங்களையும்
செய்யத் தொடங்கிவிட்டார்.
பறவை மீன்கள் பாலூட்டிகளையும்
தெய்வம் என்றார்கள் - பின்
இறந்து போன மனிதரையெல்லாம்
இறைவ(ன்) ஆக்கி விட்டார்.
பரந்து விரிந்த உலகம் இதனைப்
படைத்த சக்தியினை
பரம்பொருளென்று சொல்லுவதாலே
பாதகம் இல்லை யென்றார்.
சரிதான் ஆனால் சாட்சியமில்லை
சரித்திரம் வேறம்மா. - இதை
அறிஞர் டார்வின் அன்றே நமக்கு
அடித்துச் சொல்லி விட்டார்.
குறங்கிலிருந்து பிறந்தோம் ஆனால்
குணத்தில் மாற்றமில்லை
மரத்தில் இருந்து இறங்கி வந்து
மதத்தில் ஏறிவிட்டோம்.
அடிதடி சண்டை ஆர்ப்பாட்டங்கள்
அனைத்தும் ஏனம்மா? - சிறு
கடுகளவுக்கு பயனில்லாத
கடவுளால் தானம்மா.
இனியொரு உலகம் அமைப்போம் அதிலே
இறைவன் தேவையில்லை. - சக
மனிதனை மதிப்போம், மனிதனாய் வாழ்வோம்
மதங்களும் தேவையில்லை.
To view the video of this poem CLICK HEAR

14.04.10
கடவுள் இல்லை என்பதை நீயும்
கண்டுகொள் மகளே!
அடம்பிடிக்கும் சில அறிவற்றோரைத்
திருந்தச்சொல் மகளே!
ஆதி மனிதன் தீயைப் பார்த்து
அச்சம் கொண்டதனால் - அதை
ஜோதி என்று சொலிகொண்டு
வணங்கத்தொடங்கி விட்டான்.
இயற்கை தெய்வம் என்று இருந்த
மக்கள் பின்னாலே
செயற்கையாக தெய்வங்களையும்
செய்யத் தொடங்கிவிட்டார்.
பறவை மீன்கள் பாலூட்டிகளையும்
தெய்வம் என்றார்கள் - பின்
இறந்து போன மனிதரையெல்லாம்
இறைவ(ன்) ஆக்கி விட்டார்.
பரந்து விரிந்த உலகம் இதனைப்
படைத்த சக்தியினை
பரம்பொருளென்று சொல்லுவதாலே
பாதகம் இல்லை யென்றார்.
சரிதான் ஆனால் சாட்சியமில்லை
சரித்திரம் வேறம்மா. - இதை
அறிஞர் டார்வின் அன்றே நமக்கு
அடித்துச் சொல்லி விட்டார்.
குறங்கிலிருந்து பிறந்தோம் ஆனால்
குணத்தில் மாற்றமில்லை
மரத்தில் இருந்து இறங்கி வந்து
மதத்தில் ஏறிவிட்டோம்.
அடிதடி சண்டை ஆர்ப்பாட்டங்கள்
அனைத்தும் ஏனம்மா? - சிறு
கடுகளவுக்கு பயனில்லாத
கடவுளால் தானம்மா.
இனியொரு உலகம் அமைப்போம் அதிலே
இறைவன் தேவையில்லை. - சக
மனிதனை மதிப்போம், மனிதனாய் வாழ்வோம்
மதங்களும் தேவையில்லை.
To view the video of this poem CLICK HEAR

1 comment:
awesome
Post a Comment